Saturday, March 5, 2016

வானமுயர்த்து உன்செயலை....

கல்வி கற்போம் சீராக
கனவு காண்போம் எதிர்கால
வெல்லும் வழியை உயர்வாக
நெஞ்சினில் சுமப்போமே...

வரலாறு சொல்லட்டும் உன்நாமம்
வளங்கள் காணட்டும் உன்சமூகம்
அறத்தின் வழிகளைநீ கொண்டால்
அகிலமுந்தன் பெயர்சொல்லும்....

தோல்வி வந்தால் துவழாதே
தோற்பது உந்தன் இயலாமையே
வாழ்க்கை பாடம் கற்றிட்டே
வானமுயர்த்து உன்செயலை....

ஒழுக்கமுறையை மறவாதே
ஒழுகு அதனால் உயர்வாமே
எழுது சரித்திரம் விரைவாக

எழும்பும் புதிய எதிர்காலம்....




No comments: