Friday, November 15, 2013

தனிமை

தனிமையே தோழனாக தனிமையே காதலனாக தனிமையே உறவாக தனிமையே நானாக நானே தனிமையாக என்று சுழன்றிடும் என்வாழ்நாட்களில் அண்மைக்காலமாக ஏராளமான மன அழுத்தங்களுக்கு ஆட்பட்டு அல்லல்படும் மனதை என்னால் கொஞ்சம் நிம்மதிநிலைக்கு அழைத்துசெல்லமுடியுமா என வகைப்பார்த்துக்கொண்டிருக்கின்றேன்.

மனதை திறந்திடும் தோழனாக அநேக  நேரங்களில் உதவிக்கு வருவது இந்த பேனைக்கரங்கள் மட்டுமே அதுதான் இந்தப்பதிவின் உருவாக்கம். ஆழப்புதைந்திடும் அழுத்தங்களை அள்ளிவீசிட முடியாது அல்லலுறும் போதெல்லாம் ஆறுதல்தரும் பேனைகளுக்கு என்னென்று நன்றி சொல்வேன் நானறியேன்.

நம்பிக்கை துரோகம் என்பதின் வலியை ஆழம்வரை சென்று அநுபவித்த வடு இன்னும் மனதை விட்டு நீங்கமறுக்கின்றது. அதனை மாற்றுவதற்கு காலத்திடம் களிம்பு கிடைக்குமட்டும் காத்திருக்கின்றேன் உங்கள் ஆலோசனைகளையும் எதிர்பார்த்தவண்ணம்....



No comments: