Monday, November 25, 2013

நீயும் நானும் எங்கே எங்கே????

என் கண்ணீர்துடைத்த‌
உன் விரல்கள் எங்கே

என் கவலைகளை மறந்த‌
உன் புன்னகை எங்கே

என் பயணத்துக்கு துணையான‌
உன் பாதங்கள் எங்கே

என் கைகள் கோர்த்த‌
உன் கரங்கள் எங்கே

என் தலையைகோதும்
உன் தாய்மைவிரல்கள் எங்கே

என் கோபத்தை குறைக்கும்
உன் செல்லச் சிணுங்களெங்கே

என் அறியாமைகளை தகர்க்கும்
உன் ஆளுமைகுணமெங்கே

என் அன்பை யாசிக்கும்
உன் பாச இதயமெங்கே

என் கனவுகளை உயிர்ப்பித்த‌
உன் கனிவுகள் எங்கே

என் உள்ளத்தை மேயும்
உன் குறும்புகள் எங்கே

என் உளறல்களை அதிகரிக்கும்
உன் குழப்படிக்கள் எங்கே

என் நினைவுகளை தொலைக்கும்
உன் நாட்கள் எங்கே

என் வாழ்வுதனை அழகாக்கிய‌
நம் கடந்தகாலங்கள் எங்கே எங்கே???


நம் வாழ்க்கையை அர்த்தமாக்கிய‌
அந்த வசந்தங்கள் எங்கே

நம் ஆனந்தத்தை அதிகமாக்கிய‌
அந்த நிமிடங்கள் எங்கே

நம் எதிர்கால‌த்தை பறைசாற்றிய‌
அந்த நேரகாலங்கள் எங்கே

நீ எங்கே எங்கே
என் நெடிய இரவு அழைக்கின்றது

நீ எங்கே எங்கே
என் அஸ்தமித்த விடியலழைக்கின்றது

தொலைந்துபோகப்போகின்றேன்
சீக்கிரம் வந்துவிடு

தொலைதூரமிருப்பினும்
சீக்கிரமாக வந்துவிடு -சிலநேரம்
மூடியபெட்டியை திறப்பதற்கு
மூடக்கதைகள் சொல்லுவார்கள்!!




No comments: