Saturday, November 23, 2013

ஒரு மணமகளுக்கு என்ன தகுதி இருக்கவேண்டும் ஒரே கன்பியூசுங்க‌ யாராவது சொல்லுவிங்களா????




ஒருதடவை அழைப்பெடுத்து பதிலில்லாவிட்டால் பேசாமல் இருக்கும் எனது நண்பி இரண்டு தடவைக்கும் பதிலளிக்காத எனது கைப்பேசிக்கு தொடர்ந்து அழைப்பெடுத்துக்கொண்டேயிருந்தாள். நீண்ட நேரத்துக்குப்பின் அதனை செவிமடுத்த நான், வேகமாக காதில்பொருத்திக்கொண்டு நண்பியின் திட்டுக்களோடு தொடர்ந்த அவளது வினாக்களை செவிமடுத்தேன். 'ஏன்டி மாடு......(இன்னும் பல) ஏன்டி இவ்வளவு நேரம் இந்த போன எடுக்க அவ்வளவு வேலையா உனக்கு என்ற திட்டலோடு ஆரம்பித்தாள். (இன்று அவளை பெண்பார்க்கவருவதாக சொல்லியிருந்தாள் அதான் அவ ரொம்ப பிஸியா இருப்பாளே என்று நாளும் தொலைபேசியை கவனிக்கவில்லை (அவளை தவிர வேறு அழைப்புக்கள் எனக்கு வருவது குறைவு அதுதான் )






"ஏன்டி, இவனுங்க மனதில என்ன நினைச்சுக்கொண்டு வாரானுங்க??? ஒரு குடும்ப பொண்ணுக்கு என்ன இருக்கவேணும்னு இவனுங்க நினைக்கிறானுங்க?" ஏன்டி என்ன ஆச்சு என்ற எனது வினாவுக்கு அவள், வந்தவங்க சாப்பாட்டுக்குப்பிறகு பேச்சை ஆரம்பிச்சாங்க எல்லா கேள்விகளுக்கும் அம்மாவும் அப்பாவும் பதில்சொல்லிக்கொண்டிருந்தாங்க நான் ஒன்றுக்கும் வாய் திறக்கவில்லை ஏன்னா அவங்க பாதியிலயே எழும்பி ஓடிடுவாங்க என்றதால் என்றாள். சரிடி என்ன நடந்திச்சுன்னு சொல்லு என்றேன், இததான்டி கேட்டாங்க அரசாங்க வேலைதானே? மாதச்சம்பளம் எவ்வளவு? பட்டதாரிதானே? ஆங்கிலம் கதைப்பாள்தானே? என்று கேட்டவர்கள் கடைசியில கேட்டாங்க கொம்பியூட்டர் தெரியுமா? என்று... இவங்க பொண்ணு பார்க்கவந்தாங்களா என்னை வேலைக்கு இன்டவீவ் பண்ண வந்தாங்க ஏன்டி இப்படி இருக்கானுங்க??

"வந்த ஆத்திரத்தை வாய்க்குள்ளே அடக்கிக்கொண்டேன் இன்னும் கொஞ்சநேரம் அவங்க உட்கார்ந்திருந்தாங்கன்னா என்னநடந்திருக்குமோ தெரியாது" என்றாள். அவளது ஆதங்கம் எனக்கு நன்றாகவே புரிந்தது. இப்படி எத்தனையோ வரன்கள் வந்து ஒவ்வொரு காரணங்களுக்காக தட்டிக்கொண்டுபோனதில் அவளுக்கு மனதளவில் பாதிப்புதான் ஆண்களைக்கண்டாலே வெறுப்போடு பார்க்குமவள் ஆண்கள் எல்லாரையும் ஒருவித சந்தேகத்தோடு பார்க்கும் புதிய பார்வையையும் புதிதாக உருவாக்கிக்கொண்டிக்கின்றாள் என்பது இன்றுதான் புரிந்தது. அவளது ஆத்திரமாக கேள்விகளுக்கு பதிலளிக்கமுடியாது வாயடைத்து நின்றேன். அவள் குடும்ப பொறுப்புக்களும் குணசாலியுமான பெண்ணென்பது எங்கள் யாவருக்கும் தெரியும் அவர்களுக்கு தெரியவில்லை உண்மையில் அவளை தவறவிடும் எவருமே துரதிஸ்டசாலிகளே துரதிஸ்டசாலிகளே என்பது நிச்சயம்.




ஒரு ஆணும் பெண்ணும் இணைந்த குடும்ப வாழ்க்கைக்கு வெறும் தகுதிகளையும் தாள்கள் நிறைந்த தராதரங்களையும் மட்டும் கொண்டு இணைத்துவிட முடியுமா? மனம் சம்பந்தப்பட்ட எந்த விடயங்களும் தேவைப்படுவதில்லையா? அன்பு அரவணைப்பு பாசம் என்ற விடயங்களெல்லாம் பணத்தாலும் பட்டங்களால் மட்டுமே நிர்ணயிக்கப்படக்கூடுமோ ஒன்றுமே புரியலப்பா????

ஆக, திருமணம் என்பது மனம் சம்பந்தப்பட்ட ஒன்றல்ல பணம் சம்பந்தப்பட்டது, திருமணம் என்பது பாசம் சம்பந்தப்பட்டதல்ல பட்டம் பதவி சம்பந்தப்பட்டது, திருமணம் என்பது நேசம் சம்பந்தப்பட்டதல்ல கலப்படமற்ற வேஷம் சம்பந்தப்பட்டது என்பதாக உறுதிசெய்துகொள்ளலாமா????


No comments: