Wednesday, November 6, 2013

உதிரம்சொட்டும் உபத்திரவம்!!

இதயம் முறுக்கி
இமைகள் பிழிந்து
உதிர்த்துவிடும்
இதய ஓலங்கள்

அர்த்தம் சிதைத்த‌
அன்பின் தடயங்கள்
அமிழ்ந்த ழிகின்றது
ஆதாரமின்றி...

எதிர்பார்ப்புக்கள்
உடைபடுவதால் மட்டுமே
எஞ்சிக்கொண்டேபோகின்றது
எளிமைநேசம்

தொடர்ந்திடும்
துரோகங்கள்
வாய்மொழிக்களவுகள்
வார்த்தைவழியே
சிதறிவெடிக்க‌
உதிரம்சொட்டும்
உபத்திரவம்
இதயவறைக்குள் மட்டும்


உண்மைகள் தவறிய‌
உறவுகள்
உள்ளத்தை தொலைத்த‌
அவர்கள்
சிலிர்ப்புக்களோ
சிந்தனைகளோ
எதிர்படாமல்
நீரோட்டமாய் ஓட‌
நீதியைத்தேடும்
எனதுள்ளம் மட்டும்
ஏமாற்றத்தின்
பிரதிநிதியாய்
பின்வாங்கிக்கொண்டிருக்கின்றது!!





No comments: