Tuesday, November 19, 2013

உன்னிடம் மட்டுந்தான்

பத்துப்பேரும்
பலவிதமாய் பேசலாம்
பித்துக்கொள்ளவைக்கும்
பிதற்றல்களை உதறிடலாம்
குத்திக்கொல்ல
குறியும் பார்க்கலாம் -ஏன்
கூட இருந்தே
குழியும் பறிக்கலாம்
பலவீனப் பட்டு மட்டும்
போய்விடாதே -எல்லாவற்றையும்
தூக்கிநிறுத்தும்
துணிவு என்பது
உன்னிடம் மட்டுந்தான்
உலகளவில் குடிகொண்டிருக்கின்றது!!








No comments: