Wednesday, November 27, 2013

தமிழ்மொழியில் குறையா???

தமிழ்மொழியில் காணப்படும் குறையாக சில சப்தங்களுக்கான எழுத்துக்கள் இல்லாமை உறுத்தலாகவும் கடினமாகவும் இருக்கின்றது என்றே கூறவேண்டும். சில எழுத்துக்கள் வடமொழியிலிருந்து கடன்பெற்றாப்போல.... இன்று ஒரு மாணவி தன் பெயரெழுதுகையில் பார்த்த நான் ஒருகணம் குழம்பிப்போய்விட்டேன் காரணம்,  அவளுடைய உண்மையான் பெயர் Ganganiஅவள் எழுதியிருந்தது 'கங்காணி' என‌(கங்காணி என்பவர் கண்காணிப்பவ‌ர்) ப(Ba), க(Ga), த(Dha), ட(Da) போன்ற சப்தங்களுக்கான எழுத்துக்கள் சகோதரமொழியைப்போல தமிழ்மொழியில் காணப்படவில்லை இது பெருங்குறையே இதற்கான முயற்சிகளை எம் தமிழ்புலவர்கள்,தமிழ்பண்டிதர்கள்,பெரியவர்கள் கலந்தாலோசித்து ஆவன செய்தால் என்ன????? இது ஓரு குறையா அல்லது இவ்விடயம் அத்தனை பெரியபாதிப்ப‌ல்ல என்பதா என்பதை அறியத்தருவீர்களா?

No comments: