Wednesday, January 20, 2016

மூன்றாம் இடத்தைப்பெற்றுக்கொண்ட கவிதை (January 2016)




"புதுமை தமிழ்த் தென்றல்" இணையம் மாதந்தோறும் (ஜனவரி 2016) நடாத்தும் கவிதைப்போட்டியில் "சொல்லாற்றல்" சிறப்புக்கவிதையாக தெரிவுசெய்யப்பட்டு மூன்றாம் இடத்தைப்பெற்றுக்கொண்ட கவிதை




உண்மையாய் காதலியுங்கள் நீங்கள்
உயிராய் காதலியுங்கள்
உறவை உங்கள் அவனை/ளை
உத்தமமாய் காதலியுங்கள்...

குறைகளை ஒதுக்கி
குற்றங்களை மறந்து
உள்ளத்தில் சுமந்திடுங்கள்
நேரத்தை ஒதுக்கி
நேசத்தை வளர்த்து
நேர்மையாய் காதலியுங்கள்...

சின்ன சண்டைகளில் சிரித்து
சில்மிஷங்களில் குழைந்து
சிறியதயோர் சாம்ராஜ்யமுருவாக்குங்கள்...

கைகோர்த்து நடங்கள் உங்கள்
பாதங்களுக்கு ஒரே பாதையாக்குங்கள்
இதுதான் வாழ்க்கை என‌கூறுங்கள்
இதுவே எனதுலகமென்று கூறுங்கள்
ஒரே வாழ்க்கைக்கு
ஒரே இதயமென்று சொல்லுங்கள்
ஒரே உயிருக்கு
ஒன்றே காதலென எண்ணுங்கள்.....




No comments: