Tuesday, January 5, 2016

வேண்டுமெனக்கு...

துரோகங்கள் வேண்டுமெனக்கு
துளிர்த்து ஓங்கி வளர்ந்திட..


தோல்விகள் வேண்டுமெனக்கு
தோன்றி ஜொலித்து நிலைத்திட..


அவமானங்கள் வேண்டுமெனக்கு
அடுத்தடுத்த வெற்றிகளை தந்திட...


ஏமாற்றங்கள் வேண்டுமெனக்கு
ஏற்றம் பலநான் கண்டிட...


வஞ்சத்தி னனுபவம் வேண்டுமெனக்கு
வாழ்வை நானும் ரசித்திட...


கண்ணீர்நிதம் வேண்டுமெனக்கு
கவலைதுறக்கும் வழி யறிந்திட...


வேதனைகள் வேண்டுமெனக்கு
வேரிழந்த மரமாய் வீழ்ந்திடாதிட...


அதிகதிகமாய்  வேண்டுமெனக்கு எல்லாவற்றிலும்
அறிந்து தெளிந்து நான் மீண்டிட...






No comments: