Friday, January 29, 2016

ஒருமுறை நினைத்திடுவாயா

அருவெறுப்பாகத்தான் இருக்கின்றது
அகத்தழகை நீ அழகாய்க்காட்டியபின்

வெட்கங்களை செதுக்கி செதுக்கி
வெண்மையாய் பேணி பசப்புகின்றாய்

பாவம் அவர்கள் உனதான மாயையில்
பார்வையிழந்து போயினர்

பாவத்தின் சம்பளம் மரணம்
பரிதாபப்படுகின்றேன் உனக்காக‌

கேடுகளை கெட்டித்தனமா யாக்கியதை
கேட்டுவிட்டார்களென கொக்கரிக்கிறாய்..

கேவலம் நீயொரு கழிவு என்பதை
கேட்டுணர மறுக்கின்றாய்

ஒரே வாழ்க்கை ஒரே மனதென்பதை
ஒருமுறை நினைத்திடுவாயா

பிழைகள் மனித இயல்பு -அதையே
பிடித்துயர்ந்தால் உனக்கில்லை விடிவு













No comments: