Saturday, January 2, 2016

அதிஸ்டசாலிதான் நான்!!


சரியாகத்தான் சொன்னேன் அதை
சந்தேகமென்றாய்
வரிசையாக சொல்லிவைத்தேன்
வசை பாடினாய்....

அதிஸ்டசாலிதான் நான்
யாருக்கு கிடைக்கும்
இப்படியொரு பாக்கியம்...


கூடவே இருந்தவன்
குழிபறித்தது கூட தெரியாமல்
கும்மாளம் போட்டதும்...


கைப்பிடிப்பானென காத்திருந்து
கைகழுவியதுகூட அறியாமல்
காதலித்துக்கொண்டிருந்ததும்...


காலம் கடந்தேனும்
காற்றாய் வருவானென்று
காத்திருந்து
கல்யாணக்கோலத்தில் அவனை
கண்டதிர்ந்ததும்....

யாருக்குத்தான் கிடைக்கும்
இப்படியொரு பாக்கியம்
அதிஸ்டசாலிதான் நான்!!



No comments: