Sunday, January 3, 2016

ஊடறு இணையத்தில் கவிதை (02.01.2016)

http://www.oodaru.com/?p=9455


இறவா என் தேடுதல்மட்டும்
*************************************************\


எனக்கான கதவுகள் மூடப்பட்டும்
எதிர்பார்ப்பின் கைகள் நிறுத்தப்படவேயில்லை…

முயற்சிகள் முழுமூச்சாய் பறந்தாலும்
முட்டுக்கட்டைகள் அங்கங்கே நிறுத்திவைக்கப்பட்டுள்ளது..

கனவுகள் நீண்டுகொண்டிருப்பினும்
இரவுகள் இன்னும் அப்படியேதான்….

பாதங்களில் வேகத்தை கூட்டினும்
பாதைகள் பாறைகளால் மறைக்கப்பட்டேயிருக்கின்றது…

வெறித்தனமான எண்ண அலைகள்
வெளிக்கிளம்பியவுடனேயே வெப்பக்குகை திறக்கப்படுகின்றது….

பார்வைக்கணைகளால் அராஜகம் எரித்தும்
பக்கத்திலேயே பாதகங்கள் நடந்தேறிவிடுகின்றது…

இன்னுமின்னும் இம்சைகள் சூழ்ந்திடினும்
இறவா என் தேடுதல்மட்டும் தொடர்ந்துகொண்டேயிருக்கின்றது….


இறவா என் தேடுதல்மட்டும்


இறஇறவா என் தேடுதல்மட்டும்வா என் தேடுதல்மட்டும்

No comments: