Tuesday, October 1, 2013

நிறுத்திக்கொள்

பாவத்துக்கு
பட்டாடை கட்டிவிட்டு
பரிதாபங்களை
பத்திரப்படுத்திக்கொள்கின்றாய்
பிரதிபலன்களை இந்த‌
பரிதாபங்கள் தருவதில்லை
பலாபலன்களை இந்த‌
நீலிக்கண்ணீர்கள் தருவதில்லை
தீர்ப்பைமட்டும் நெஞ்சில்
தினந்தோறும் நிறுத்திக்கொள்
நாளைய வழக்கில் உனக்கு
தூக்குத்தண்டனையும் கிடைக்கப்பெறலாம்

No comments: