Monday, October 21, 2013

எழப்போவதில்லை






இரவாய்ப் போன வானத்தில்
சூரியன் தேடுகின்றாய்

இயங்காத ஊன இதயத்தில்
உணர்வுகளை எதிர்பார்க்கின்றாய்

கல்லறை பிணத்திற்கு
காதல் கடிதம் நீட்டுகின்றாய்

கானல் நீருக்குள்
வண்ண மீன்கள் பிடிக்கின்றாய்

அமாவாசை நிலவில்
வெளிச்சத்தை விரும்புகின்றாய்

அதிசயங்கள் நிகழ்ந்தாலொழிய -உன்
ஆக்கங்கள் எழப்போவதில்லை

நீ,

தொலைத்ததை தேடவில்லை
தொல்லையென்றெண்ணியதை நாடுகின்றாய்

வசந்தத்தில் மட்டுமே வயப்பது உன்
வாலிப விருப்பத்தின் திருப்பங்கள்

தூர்ந்துபோன தீபத்தில்
ஒளி பிரகாசிக்கப்போவதில்லை
மீண்டும் தீபமேற்றாதே.....

No comments: