Saturday, October 26, 2013

எதுவுமே இன்னும் மாறவில்லை




எதுவுமே இன்னும் மாறவில்லை
எதிராக எதுவும் நிகழவில்லை
அப்போதிருந்த இதயம்
அன்றிருந்த அன்பு என்று
எதுவுமே மாற்றப்படவில்லை

அதே கனவுகள்
அதே நினைவுகள்
அதே உணர்வுகளென்று
எதிலுமே மாற்றங்களில்லை

நொடிக்கு நொடி நினைப்பது
அடிக்கடி நினைவுக்குள் புதைவதும்
பிடிக்காததுபோல் நடிப்பதும் -பின்
மடிமீதுன் கனவுகளை தாலாட்டுவதுமாய்
இன்னும் எதுவும் மாறவில்லை

பெயரிலுள்ள ஓரெழுத்தை கண்டாலே
உயிருக்குள் மகிழ்வதும்
உன் முதலெழுத்துமென் முதலெழுத்தும்
ஒன்றாக இருந்தாலே பொங்கியெழுவதும்
இப்போதுகளில்கூட ஓயவில்லை


எல்லா பாதைகளும் நம்
பயணத்தையும்
எல்லா விடயங்களிலும் -நம்
நினைவுகளுமே
நிர‌ம்பி வழிகின்றது இனியுமிதில்
மாற்றங்கள் நிகழப்போவதில்லை

என்று தொடங்கியதோ
அன்றிலிருந்து
கண்ணீரும் காயங்களும்
வலியும் பிரிவும்
வந்து வந்துபோனாலும்
நிரந்தரமாக நீங்கிச்செல்வதை
நினைத்த‌துகூட இல்லை
இன்னும் நேசிக்கின்றேன்
இன்னுமின்னு மதிகமாகவே நேசிக்கின்றேன்

விழித்துக்கொண்டிருக்கின்றேன் -இன்றும்
விழித்துக்கொண்டேயிருக்கின்றேன்
புரியவைக்கும் புத்தியில்லாமல் -காதலை
தெளியவைக்கும் அறிவில்லாமல்..






No comments: