Monday, October 28, 2013

அவனேயிருக்கின்றான்

தழுவிடும் தென்றலும்
தாளாத வெப்பமும்
தரைதொடும் அலைகளும்
தகித்திடும் நிலவும்

பிறந்திடும் நொடிகளும்
புகுந்திடும் நிமிடங்களும்
மறந்திடா நினைவுகளாய்
மனதை வாட்டுகின்றது

இயற்கைக்கு அப்பால் -ஒரு
இடமிருந்தால் சொல்லுங்கள்
நினைவுகளைவிட்டு
நீங்கிவிடவேண்டும்
எல்லாவற்றிலும் அவனேயிருக்கின்றான்!!



No comments: