Monday, October 28, 2013

மறந்தேவிடுகின்றேன்.

காயங்களை கடத்திவிட்டு
கனவுகளிடமிருந்து மீண்டுவிட்டு
கண்ணீரிலிருந்து எழுந்துவிட்டு
கவலைகளிடமிருந்து விடைபெற்றுவிட்டிந்த‌
கலவரங்களினின்று
காணாமல் போய்விடவே
கண்விழிக்கும் ஒவ்வொரு பொழுதுகளிலும்
கணக்கிடுகின்றேன்

கதறியழும் குழந்தை அன்னையை
கண்டதும் அடங்கிவிடுவதைப்போல‌
உன் நினைவுகள் மறித்திடும்
ஒவ்வொரு கணப்பொழுதுகளிலும் இதனை
மறந்தேவிடுகின்றேன்....

**********.......................... **********.......................... ***********...................... *********......

No comments: