Tuesday, September 17, 2013

தனிமை

சந்தோஷந் தந்தாய் தனிமை
சங்கடங்களையும் தந்தாய்
பிரியத்தை விதைத்தாய் நெஞ்சில்
பிரிவின் வேதனையையும் விதிர்த்தாய்
அன்பினால் கூடினாய் அடிக்கடி
அமைதியின்மையையும் கூட்டினாய்
புன்னகையை மலர்வித்தாய் சட்டென்று
புண்களையும் மலர்வளையமாக்கினாய் இன்றோ
தனிமை சாம்ராஜ்யத்தில்
தலைமைப்பதவியை எனக்களித்து
தள்ளிநின்று ர‌சிக்கின்றாய்!!




No comments: