Thursday, August 4, 2011

மனிதனாய் வாழ்ந்திடலாம்!!

நோன்புதனை நோற்பதினால்
மாண்புதனை பெற்றிடலாம்
அன்புதனை கொண் டதனால்
அண்ண‌லினை கண்டிடலாம்...

நபி வழியில் நடப்பதனால்
நல் லொளியை பெற்றிடலாம்
தூஆக்கள் கேட்பதனால்
தூய வழி கொண்டிடலாம்...

உயிருள்ள நாட்க‌ளெலாம்
உண்மையாக‌ இருந்திடுவோம்
தீங்கு செய்யும் க‌ய‌வ‌ருக்கும்
ந‌ன்மைத‌னை செய்திடுவோம்...

தூற்றுத‌லை தூஷன‌த்தை
தூர‌த்திலே த‌ள்ளிடுவோம்
தூய‌வ‌ரின் வ‌ழிந‌ட‌ந்து
மாய‌ லோகை வெறுத்திடுவோம்...

குர் ஆனை ஓதுவதால்
குற்றங்களை உணர்ந்திடலாம்
மற்றவரை மன்னிப்பதால்
மனிதனாய் வாழ்ந்திடலாம்...

[ரமழான் பெருநாளை கொண்டாடவிருக்கும் அனைத்து இஸ்லாம் நண்பர்களுக்கும் சகோதரர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்]

No comments: