Friday, August 12, 2011

சின்னச் சின்ன சிந்தனைகள்

01.உனக்கு எதிரி நீயேதான்!!

உன்னை வென்றுபார்-இதோ
உலகையும் வென்றிட்டாய்...

உள்ளந்தனை உற்றுப்பார்-இதோ
உண்மைகளை கண்டிட்டாய்...

உபாதைகளை தாண்டிப்பார்-இதோ
உயரங்களை அடைந்திட்டாய்...

உனக்கு எதிரி நீயேதான்
உன்னை வென்று பார்!!


02.வாலிபத் திரை கிழிகையிலேதான்
வாழ்க்கையை நீயும‌றிகிறாய்
வ‌ச‌ந்த‌ங்க‌ளிருக்கும் போதோ
விழி மூடியே துயில்கிறாய்!!

03.நீதியின் பாதைக‌ள்
நீண்டு சென்றாலும்
வ‌ழிய‌தின் ந‌டுவிலே
வ‌லித்து நிறுத்திடுகிற‌து
பாத‌ங்க‌ள்!!

04.நெருக்க‌ப்ப‌டும் போதெல்லாம்
நொருங்கி விடாதே
வ‌ருத்தப்பட்டுன் ம‌ன‌மெல்லாம்
திருத்த‌ப் ப‌டுவ‌தைய‌றிந்திடு!!

05.பொருந்தாக் காத‌லினால்
பொல்ல‌டி ப‌டுவ‌திலும்
பொசுக்கும் காத‌லையே
பொறுமையோடே க‌ழித்திட‌லாம்!!











No comments: