Thursday, August 4, 2011

ப‌ற‌வையாய் பிரிந்த‌ பா‌வை...

ஆம்ப லழகினை ஆதாரமாய் கொண்டே
ஆண்டவன் வடித்திட்டயென் பொன் வண்டே
ஆருயிர் வாங்கிடுமுன் வதனச் சொண்டே
ஆட்டிப் படைக்குதென் நெஞ்சமதை பெண்டே...

இடைக்குக் கீழே இலாவகமாய் விழுந்திருக்கும்
இளையநதி போலது சுண்டியே யெனையிழுக்கும்
கருங்கூந்தல் நெட்டாற்றில் மனம் தொலைந்திருக்கும்
காளையிவன் நெஞ்சமதும் கலங்கியிருக்கும்...

மேவிவந்த எண்ணமதை மெளனமுமே தட்டிவிட‌
மோக‌ன‌ச் சின்ன‌ம‌தை மொழியாலே திட்டிவிட‌
உன‌தி மைய‌சைவுக‌ள் என்னித‌ய‌ம்வ‌ரை எட்டிவிட‌
உன‌க்கில்லையி தென‌ உள்ள‌மெனை குட்டிவிட‌...

ஆடிய‌சைந்த‌ பேரூந்தும் அடைக்க‌ல‌ம‌தை க‌ண்டு
ஆர‌ ம‌ர‌ அனைவ‌ரும் இற‌ங்கும்வ‌ரை நின்று
ஆழ்ம‌ன‌தில் உருண்டோடிய‌ ஆம்ப‌லே நீயும்
அறியா திற‌ங்கிபோகையிலே ப‌ற்றிய‌து தீயும்...

No comments: