01.உன் நினைவுக ளென்(ன)னை
நிழலா(?)கத் தொடர்கின்றது
வெயிலில்லாத போதும்...!!
02.தேனுக்காவே வண்டுகள்
பூவுக்காக வருந்தியதில்லை
வானுக்காகவே யந்த நிலவு
விலகிச் சென்றதில்லை...!!
03.வளமில்லை பொருளில்
பலமில்லை யதனால்
நிலமில்லை எம்விதைகளுக்கிங்கு
களமில்லை யென்பேன்...!!
04.கவியூற்றுக்கள் உடைபடுகையில்
எரிமலையாக குமுறுகின்றன
ஊற்றுக்களாக கொப்பளிக்கின்றன
பாசிகளாய் மட்டும்
படிந்துபோவதில்லை!!
05.உன் வாயென்ன தேங்காய்த்துருவியா
தவறாய் நினைக்காதே
வார்த்தைகளெல்லம்
பூவாய் வந்து விழுகின்றது
06.உன்னையன்றி ஓர் மொழியும் தெரியாதெனக்கு-தமிழே
குற்றமின்றி கவிபுனையும் வழியை நீ விளக்கு
07.அன்னம் போல நம் செய்கைகள் இருக்கட்டும்
ஆறு போல் எம் வழிகள் தொடரட்டும்...
2 comments:
fine.do well.
thank you very much sir
Post a Comment