தேசம் கடந்துவாழும் நேசங்களுடன் கிட்டிய ஓர் உறவுப்பாலந்தனை வழங்கிய லண்டன் தமிழ் வானொலி பொறுப்பாளர் திரு நடாமோகன் அவர்களுக்கும் "கீதாஞ்சலி" நிகழ்ச்சியின் அறிவிப்பாளினி திருமதி ஷயிப் மலிக் அவர்களுக்கும் வானொலியின் சகல அங்கத்தவர்களுக்கும் எனது பணிவான வணக்கங்கள்.
31.07.2011 அன்றைய கீதாஞ்சலி நிகழ்ச்சியில் எனது நேர்காணலை ஒலிபரப்பி புதிய படைப்பாளியாக தமிழ் நெஞ்சங்களுக்கு மத்தியில் என்னை அடையாளப்படுத்தியதில் மகிழ்வடைகின்றேன்.இந்நேர்காணலை மீண்டும் ஒலிபரப்பி நேயர்களின் வாழ்த்துக்களையும் கருத்துக்களையும் இணைத்து எனது கவிதைகளை உங்கள் பார்வையில் ஆராய்ந்து நல்ல பகர்ந்துகொண்டபோது உண்மையில் எனது கவிதைகளுக்கு சிறந்த அங்கீகாரம் கிடைத்திருப்பாதாக உணர்ந்துகொண்டேன்.அந்த அனுபவத்தினை பெற்றுத்தந்த உங்களுக்கு எனது நன்றிகள்.நிறந்த நேசத்தோடு வளமான வாழ்த்துக்களையும் கருத்துக்களையும் பகர்ந்துகொண்ட தமிழ் உறவுகளுக்கு எனது நன்றியினை மனப்பூர்வமாக தெரிவித்துக்கொள்கின்றேன்.
திரு நடாமோகன் அண்ணா அவர்களுக்கும் எனது நன்றியினை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். உங்களது கவி விமர்சனம் உண்மையில் என் மனதை நெகிழவைத்தது. அத்தோடு எனது குறைகளையும் உணரமுடிந்தது.நீங்கள் தந்த ஆதரவும் ஊக்குவிப்பும் எனது உற்சாகத்தை இன்னும்ம் அதிகப்படுத்தியிருக்கிறது என்பதே உண்மை. இன்னும் உங்களின் ஆதரவுகளையும் ஆலோசனைகளையும் எதிர்ப்பார்த்திருகின்றேன்.
நான்குவரிக் கவிதைகளுக்கு கிடைத்த வாழ்த்துக்கள் என் கவிகளுக்கு உரமூட்டியிருக்கிறது ஆனாலும் ஷயிப் மலிக் அக்கா அவர்கள் ஒரு வளர்ந்த கவிஞருக்கு தரக்கூடிய வாழ்த்துக்களை அல்லது மகுடத்தினை பகர்ந்தது அதிகப்படியென்றாலும் உங்களின் பரந்த மனதிற்கும் ஊடகத்திற்கே இருக்கக்கூடிய சமநிலைப்பார்வைக்கும் என் சிரந்தாழ்த்துகின்றேன்.
திரு நடா அண்ணா சொன்னதுபோல குழந்தையென்றால் அதை குழந்தையாத்தான் பார்க்கவேண்டும் வெள்ளைக்குழந்தை, கருப்புக்குழந்தை குண்டு குழந்தை, மெல்லிய குழந்தையென்ற பாகுபாடிருக்கக்கூடாது. இக்கொள்கையினை உங்களின் நிகழ்ச்சியினூடாக அறிய முடிந்தது வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் இன்னும் உங்கள் நிகழ்ச்சிகள் வளரவேண்டும் சிறப்படைய வேண்டும் என பிரார்த்திக்கின்றேன்.
சந்தர்ப்பம் கிடைத்தால் மீண்டும் உங்களுடன் இணைந்துகொள்கின்றேன்.
நன்றி!
-த.எலிசபெத்-
No comments:
Post a Comment