Monday, August 8, 2011

ம‌ன‌தில் நின்ற‌வை வ‌ரிக‌ளாய்...

01.என் கனவுகளெலாம்
உனதான தென்பதற்காய்
என் விடியல்களையும்
இருட்டடிப்புசெய்ய விரும்பவில்லை!!


02.ஆழ்ந்த உறக்கத்தினில்
ஆலமரத்தினின் றேதோ
ஆத்மாவின் சலசலப்பு
மரத் தடிச்சூழவுள்ள மனங்களுக்கு
மர்மப் பீதி இரண்டுநாட்களாய்
மந்திரஞ் சொன்னபிறகே
மாயமாய் போனதெலாம்
இரண்டுநாள் வேலைநிறுத்தத்தில்
இன்று காலைதான் வந்ததுபோனது
குப்பை வண்டி!!


03.ச‌ட்ட‌த்தினை ம‌திக்க‌ச்சொல்கின்றோம்
ச‌ட்ட‌மெம் கையிலிருக்கும்போது
ச‌ட்ட‌த்தினை குத்த‌கைக் கெடுக்கிறோம்
ச‌ட்ட‌த்தின் கையில் நா மிரு(று)க்கும்போது!!


04.ம‌ன‌ம் முழுக்க‌
வ‌லியின் விம்ப‌ங்க‌ள்
வ‌ழிந்து கிட‌ந்தாலும்
ந‌ம்பிக்கை மின்மினிக‌ள்
சிற‌க‌டிக்க‌ த‌வ‌றுவ‌தில்லை!!


05.நீ சிவ‌னே என்ற‌தை
நான் இயேசுவே என்கின்றேன்
நீ அல்லா என்ப‌தை
நான் புத்தாவென்கின்றென்
அழைப்புக்க‌ள் வேறுப‌ட்டாலும்
மூல‌ மொன்றுதான்
முளைக‌ளும் கிளைக‌ளுந்தானிங்கே
முட்டுக்க‌ளை ப‌ர‌ப்பின‌!!






No comments: