Thursday, August 4, 2011

சாதிநெறி சாகட்டும்


சாதிகளில்லையடி பாப்பா
சாதனைத்தலைவன்
சரித்திரம் படைத்திட்டா னேயவன் பாவிலே...

சதையை யறுத்திடும்போது
சாதியை யெதிலே தேடுவாயோ
சிவந்த குருதிக்கடலிலே எந்த‌
சா(ந)திமூலத்தை அறிவாயோ??

ஊற்றுக்கள் உறவாய் உதிக்கையில்
உனக்கு மெனக்குமேனடா
உரிமைச்சண்டைகள்...

தேசம் வேறில்லை
தேக‌ம் வேறில்லை
தோற்ற‌மும் வேறில்லை
வில‌ங்கென்றும் ம‌னித‌ரென்றும்
வித்தியாச‌ம் அறியாயோ...

ம‌னித‌க் க‌ழிவாய்
ம‌ன‌தின் வ‌ழியாய் உன்
சாதிச் ச‌ரித்திர‌த்தை
சாக்க‌டை யிலிட்டெரித்திடு
ச‌ந்தோச‌க்குலைச்ச‌ல்க‌ள் சாக‌ட்டும்...

ஊரெங்கும் உற‌வுச்சூரிய‌ன் உதிக்க‌ட்டும்
உல‌கெங்கும் உன்ன‌த‌வொளி ப‌ர‌வ‌ட்டும்...



[முகப்புத்தகச்சொந்தங்களின் கருத்துக்களையும் இணைத்துள்ளேன் மனப்பூர்வமான வாழ்த்துக்களை பகர்ந்து கொண்ட சகோதர சொந்தங்களுக்கு மகிழ்வுடன் நன்றியினை சமர்ப்பிக்கின்றேன்.]

· · Share · Delete




1 comment:

sinnathambi raveendran said...

சாதிக்கு தீ மூட்டும் சகோதரியே
நீதியாய் போராடு!
என் பாராட்டுனக்கு.

வதிரி.சி.ரவீந்திரன்.