Tuesday, December 17, 2013

எனது கவிதை அறிவிப்பாளர் சிறோவின் குரலில்

http://www.youtube.com/watch?v=B3C5i8pPnMA&feature=youtu.be


தோற்றுப்போனது
வாழ்க்கையில்தான்
துவண்டுபோனது
துடிப்புள்ள இதயமல்ல!

அடிவீழ்ந்தது
உயிரில்தான்
அணைந்து போனது
ஆழ்மனதல்ல!

காயம் கண்டது
கனிவான காதல்தான்
நோயாகிப்போனது
கண்ணியங்கொண்ட கடமைகளல்ல!

இன்னும் ஆணிகளும்
இரக்கமில்லா வஞ்சனைகளும்
என்னைச்சுற்றி சூழட்டும்

எரிந்துகொண்டிருப்பது மனமாயிருந்தாலும்
எழுந்து புன்னகைப்பேன் மலராகவே!!!

2 comments:

Unknown said...

அருமையான கவிதை வாழ்த்துக்கள் சுகா

த.எலிசபெத் (ராஜ் சுகா) said...

மனப்பூர்வமான நன்றிகள் அக்கா