Saturday, August 20, 2016

காதலில் உண்டோ கண்ணாளா

நீ
நான்
நம் அருகாமை
நம் அறியாமை
அதுதரும் அந்யோன்யம்...

சிதறும் சிந்தனை
சிறையெடுக்கும் பார்வைகள்
சிதையாத கட்டுப்பாடுகள்...

பயமில்லா நிமிடங்கள்
பதுங்கித்திரியா நிகழ்வுகள்
பதறாத வார்த்தைகள்...

உரிமையின் நீளங்கள்
உலகறியும் ஞானங்கள்
உள்ளத்தை மதிக்கும் தெளிவுகள்...


இதெல்லாம்
இன்றைய  காதலில் உண்டோ கண்ணாளா
இதற்குத்தான் காத்திருந்தேனா மணவாளா!!

No comments: