Saturday, August 20, 2016

அவர்கள்

அவர்கள்
கலிகால அட்டைகள்
காயமில்லாமல்
இரத்த முறுஞ்சுவார்கள்....

அவர்கள்
தொடர்நாடகங்களின்
காலங்களையும் தோற்கடிப்பார்கள்
வேதன உயர்வு பற்றிய‌
மேடையேற்புகளில்...

அவர்கள்
பாதையோர வியாபாரிகள் போல‌
வெளிநாட்டுக்கு
எம் பிள்ளைகளைக்காட்டி
தம் பிள்ளைகளை
பண்டிதராக்குவர்...

அவர்கள்
தெரு நாய்களைப்போல‌
குரைத்துக்கொண்டே  இருப்பர்
கடிக்க மாட்டார்கள்...

நாங்கள் பொத்திவளர்த்ததும்
போற்றி வளர்த்ததும் இப்படித்தான்!!


(21.05.2011ல் எழுதப்பட்டது)

No comments: