நா விலும் முத்துக்குமார்...
ஆனந்த யாழ் மீட்டியவன் இன்று
ஆழமான கண்ணீர் நீட்டினான்...
பாட்டிசைத்த பாவலன் -ஏனோ
பெட்டிக்குள் பார்வைக்கானானே....
பாமாலை பாடியவனை பொல்லாத
சா(வு)ச்சோலை தேடியதென்ன
பூமாலை சூடவேண்டியவனை -மரண
தீச்சூலை நாடியதென்ன....
முத்துமுத்தாய் வரி வடித்தவனுக்கு - எம்
முத்துமுத்தான கண்ணீர் துளிகள்
பித்துக்கொள்ளவைக்கும் பேனை விரல்களுக்கு
மொத்தமான ஓய்வுத்தண்டனை...
உங்களுக்கும் எங்களுக்கும்
என்னதான் உறவு?
கதறியழும் எங்களின் கண்களுக்கு
ஏனிந்த சோதனை?
எங்கோ இருக்கும் உங்களுக்காய்
ஏங்கித்தவிக்கச் செய்தது நீங்கள்
சேமித்துவைத்த வரிகள் தானே
சொத்தாய் விட்டுச்சென்ற கவிகள்தானே..
என்னை நானே வருத்திக்கொள்கிறேன்
எம்மோடு இருக்கையில் உமக்கோர்
வாழ்த்தையேனும் வழங்கவில்லையென்று
வெட்கித்தலை குனிகிறேன்
கேட்காத உன் செவிகளுக்கு கண்ணீரை
பாட்டாக படிக்கின்றேனென்று...
முத்துமுத்தான கண்ணீர் துளிகள்
பித்துக்கொள்ளவைக்கும் பேனை விரல்களுக்கு
மொத்தமான ஓய்வுத்தண்டனை...
உங்களுக்கும் எங்களுக்கும்
என்னதான் உறவு?
கதறியழும் எங்களின் கண்களுக்கு
ஏனிந்த சோதனை?
எங்கோ இருக்கும் உங்களுக்காய்
ஏங்கித்தவிக்கச் செய்தது நீங்கள்
சேமித்துவைத்த வரிகள் தானே
சொத்தாய் விட்டுச்சென்ற கவிகள்தானே..
என்னை நானே வருத்திக்கொள்கிறேன்
எம்மோடு இருக்கையில் உமக்கோர்
வாழ்த்தையேனும் வழங்கவில்லையென்று
வெட்கித்தலை குனிகிறேன்
கேட்காத உன் செவிகளுக்கு கண்ணீரை
பாட்டாக படிக்கின்றேனென்று...
ஏற்றுக்கொள் அண்ணா -இந்த
இயலாதவளின் கவிமணிகளை
பெற்றுக்கொள் அண்ணா -என்
அனுதாபப் புலம்பல்களை
No comments:
Post a Comment