Tuesday, January 21, 2014

https://www.facebook.com/ammu.kuddy.94


சகோதரி அம்முக்குட்டியின் ஆத்மசாந்திக்காக பிரார்த்தித்தவண்ணம்..... ஏன் பெண்ணே????? சோகத்தீயினை பற்றவைத்துவிட்டு பதறாமல் படுத்துறங்குகின்றாயே???


தண்டிப்பதாய் நினைத்தாயா இல்லை
உன்னை விடுவிப்பதாய் நினைத்தாயா
பலியெடுப்பதிப்படி உனதுயிரிலா
பழிவாங்குதலென்பது வாழ்தலன்றோ...

எத்தனைச் சிறப்புகளுனக்குள்
எட்டச்செல்லும்வரை நானுந் தானறியவில்லை
மொத்தச் சந்தோஷங்களையும்
மெத்தச்செருக்காய் தூக்கிச்சென்றாயே...

ஆளப்பிறந்தவள் நீ
ஆட்டிப்படைக்கவேண்டியவள் நீ
அற்பாயுசை வலுக்கட்டாயமாக்கினாயே நன‌டி
அன்புள்ளக் க‌தறல்கேளாயோ...

உனக்குள்ளெரிந்த சோகத்தீயினை நாமறியோம்
உனைச் சிதைத்தக் காயங்களினையு மறியோம்
பரிகாரமறியாமல் நீயும்
பறந்து போனதென்ன தளிரே??

நினைக்க நினைக்க வேதனைக்கனலை
அள்ளித்திணிக்கின்றாயடி பேதையே
அணைக்க முடியா ஆற்றாமைகளை
அணைத்திடவா அணைந்துபோனாய்

உனக்கான பாதைகள் வெறுமையாய் இதோ
உன் பாதங்களுக்காய் வெற்றுப்பயணங்கள்
கனத்துப்போன இதயத்துக்கு
காலனிடமா ஆறுதல் வேண்டினாய்???

இறைவா இவளுக்கு
ஆத்ம‌சாந்தி கொடுத்திடு
பிரிவில் தள்ளாடு மிதயங்களுக்கு
ஆறுதலையளித்திடு....





No comments: