Wednesday, January 15, 2014

காயங்களாறவில்லை

காலங்கள் கரைந்துபோகலாம்
காட்சிகள் மறைந்துபோகலாம்
கோலங்கள் புகுந்துகொள்ளலாம்
கொண்ட நேசமோ அழிந்துபோவதில்லை

சாட்சிகளிங்கில்லை
சாயங்களும் வெளுக்கவில்லை
பாட்டாகிபோனப் பாசமோ
பாசாங்காய்ப் போயிடவில்லை

கல்லாக்கிடினும் மனதில்
காயங்களாறவில்லை
சொல்லாகிப்போனதேனோ
செயலாகிப்போகவில்லை


விதிமீது பலிசொல்ல மனமில்லை
விளையாடிட்ட வழிமீதும் கோபமில்லை
மதியிழந்த செயலென புரிந்த
மனதை வலுவாக்க வழியறிவேன்!!




No comments: