Friday, January 24, 2014

கண்ணயர்வதெப்போது ???

பசிக்கிறது வயிறு
உண்ணமறுக்கிறது மனம்
சிரிக்கின்றது உதடுகள்
உணரமறுக்கின்றது உள்ளம்

வந்துதான் போனாய் ஏனென்
வசந்தத்தையும் கொண்டுபோனாய்
அ(று)ந்துவிழும் நிம்மதிச்சாலையில்
அழகாய் நடந்துபோகின்றாய்

அவஸ்தைகள் ஆழமாகின்றது
அலறல்கள் அடக்கமா யார்ப் பரிக்கின்றது
அழுகைகள் விழிகளில் தேங்கிவிடுகின்றது
ஆறுதலின்றியே அல்லல்படுகின்றது

ஆனந்தம் தந்த அந்தநொடி
இன்னொருமுறை வந்திடுமா
ஈயாடா என்நெஞ்சை மீண்டும்
உயிர்ப்பித்திடுமா
ஊனமான சந்தோஷகவிதனை
எழும்பிடச்செய்திடுமா -இல்லை
ஏள‌னத்தால் இதயமதை
கொன்றுதூர வீசிடுமா??

காயங்களும் மாயங்களும்
கலையவில்லை
போராட்டமும் நீரோட்டமும்
ஓயவில்லை

அன்றாடங்களில் அவசரம்
திண்டாட்டமா யென்பொழுதுகள்
நிஜங்களை பிய்த்தெறிந்திவ்ட்டு
நிழல்களை மட்டும் விட்டுச்சென்றாய் நான்
நிம்மதியாய் கண்ணயர்வதெப்போது ???






No comments: