Sunday, January 19, 2014

காலம் வழிசொல்ல தவறியதென்ன??

ஒத்தையில போகுங்காத்து
ஒன்ன மறந்துபோற‌தென்ன‌
மூச்சுக்காத்து நின்னதில‌
முழுசா தொலைஞ்சிபோறதென்ன‌

பாத்தும் பாக்காம நீயிருக்க‌
பாவியிவ தன்னந் தனியிருக்க‌
ஆவி எனக்கு வெறுத்துப்போக
யாருமில்லாமல் தொலைஞ்சுபோறேன்

தூரத்தில ஒரு நெலவு
துன்பத்த ஒளித்திருக்க‌
பாரத்தில எம்மன‌மோ
பாதாளத்த தேடுவதென்ன

அன்பென்று ஒன்ன நினைக்க‌
வம்பென்று நீயும் புகட்ட‌
தப்பென்று நானுணர -காலம்
வழிசொல்ல தவறியதென்ன??



No comments: