Tuesday, March 12, 2013

kuttikkavithai

01. தோற்றுப்போனது 
நிஜம்தான் 
ஆனாலும்
ஒரு நிம்மதி
தோற்றது
உன்னிடமென்பதால்!!


02.இந்தப் பிரிவுதான்
உணர்த்திச்சென்றது 
நமதுறவில் வேரோடிப்போன‌
ஆழந்தனை...


03.உனக்கும் எனக்குமான‌
இடைவெளி நீள்கின்றது
கானலுக்கும் 
தாகத்துக்குமான தூரமாய்!!


04.உன்னிடமென்றால் 
ஒவ்வொரு முறையும்
தோற்றுப்போவேன்
ஜெயிப்பது நாமென்பதால்

No comments: