கொடூரங்களுக்கு
கொம்புமுளைத்து
கொலைத்தாகத் தோடலையும்
கெடுதியான காலமிது...
நன்மைகளாங் காங்கே ஒடிந்து
அன்பினை கொன்றொழித்துவிட்ட
துன்பவியற் கலியுகமிது...
வண்கண் கொண்டேயன்றி
வனிதையரை நோக்கிட
நற்பார்வை இங்கில்லையெவர்க்கும்...
ஓட்டுக்குள் நத்தையாய் பார்த்திரு
தீண்ட வருவோர் பாதங்கள்
புண்ணாகிடட்டும்!
பாலகனென்ன பாட்டியென்ன
பறந்துதிரியும் கழுகுப்பார்வைகள்
வெறிகொண்ட பசியராய்
ருசித்திட அலைகின்றது...
பாசமும் பண்பையும்
தூசென மதித்து
பாவச்செயலோ டழையும்
பாழ்பட்ட பார்வைகளிங்கே...
பாவையர்தம் பாதுகாப்பை
பார்வையாலும் பறைசாற்றுவீர்!!
No comments:
Post a Comment