கடவுள்மனி தனைதான் படைத்தான்
மனிதன் மற்றதெலாம் படைத்துக்கொண்டான்
படைத்தலி லென்னபிழை கண்டாய்மா மனிதா
பிழைகளில் பின்னிக்கொண்டவன் நீதானே...
கனிகளை உண்ணக்கற்றுக் கொடுத்தான்
பிணிகளை நீயேன் உருவாக்கிக்கொண்டாய்
மனதை மணக்க மதமாய் ஒளியானான்
மதத்தையே மடமையென உரைத்தாயே...
ஏழேநாளில் உலகை படைத்தான்
ஏழ்மையை எங்கேயவன் படைதான்
தாழ்வே யில்லா ஓர்வாழ்வை
தரவே சித்தம் வாஞ்சித்தான்...
தாழ்மையை தவறாய் பயன்படுத்தினோம்
ஏழ்மையுரு வாகவழிகளை யமைத்தோம்
வாழ்வை இன்னு முயர்த்திட
வறியவர் வயிற்றிலும் கைவைத்தோம்...
அடுத்தவன் கனவையும் இச்சித்தோம்
ஆசைகளி னெல்லைக்கே ஓடினோம்
தடுத்திடவும் கெடுத்திடவும் துணிந்தோம்
தந்தவனையே யின்றுபழிக் கின்றோம்...
No comments:
Post a Comment