Saturday, August 3, 2013

எதிர்பார்க்கவில்லை

விரல் பிடித்து நடக்கும்
பயணங்கள்
விழிகள் சந்திக்கும்
அந்திநேரப் பொழுதுகள்
ஒற்றைக்கோப்பைத் தேநீர்
ஓயாத உரையாடல்கள்
ஒளித்திடாத ரகசியங்கள்
ஓராயிரம் புன்னகைகளென்று
இப்போதெல்லாம் நானெதையும்
உன்னிடம் எதிர்பார்க்கவில்லை
உடைந்து போய் துடிப்பது
அதிகமாக வலிக்கிறது!!




No comments: