Friday, August 30, 2013

ஏமாற்றுக்காரி!!

அன்பை கொண்டுவந்தேன்
ஆஸ்தியைத் தேடினாய்

பாசத்தோ டோடிவந்தேன்
ப‌ணமா வென்று பார்த்தாய்

பரிவுடன் பக்கத்திலிருந்தேன்
பதவியெங்கே யென்றாய்

பிரியத்தோடு நெருங்குகையில்
பட்டத்தினையும் பெற்றுக்கொள்ளென்றாய்

காதலோடு வந்தபோதெல்லாம்
குடும்பத்தை தாண்டமாட்டேனென்றாய்

ஏழைக்காதலியாய்
ஓடிவரும்போதெல்லாம்
ஏளனமா யொதுங்கிப்போனாய்

சமூகக்கேள்விக்கு
சர்வாங்கப்பலியாகாமல்
சம்சாரமாகிவிட்ட எனைபார்த்திப்போ
என்ன சொல்லப்போகின்றாய்
ஏமாற்றுக்காரியென்பதைத் தவிர????



No comments: