முதல் தொடுகை
முழுமையான ஸ்பரிசங்கள்
தேகம் சிலிர்க்கும் புலர்வுகள்
தேனாய்ச் சுரக்கும் உணர்வுகள்

அறிவையிழக்கும் ஆனந்தப்பொழுதுகள்
ஆறாய்ப்பெருகும் களிப்புக்கள்
அத்தனையும் எனக்கு 
அறிமுகம் செய்தவன் நீ..


என‌து உலகை முதன்முதல்
சிருஷ்டித்த்வன் நீ
வெட்கத்தின் எல்லைகளை
வெட்ட வெளியாய் காட்டியவன் நீ

சமைந்த என் பெண்மையை
சங்கீதம் பாட வைத்தவன் நீ
தானாய்ப்பேசி தனியாய் சிரிக்க‌
திசை காட்டியவன் நீ

புள்ளி மானாய் ஓடிய என்னை
ஸ்தம்பிக்கச் செய்தவன் நீ
தென்றலின் ஸ்பரிசங்கள்
தீயின் வேட்கைகள்
புயலின் மோதல்கள் என்று
இன்பங்களை இனங்காட்டியவன் நீ


இத்தனையும் இயல்பாய் காட்டிய 
நீயாஇன்றெந்தன் 
கல்லறை வாசலுக்கு
வழிகாட்டியாச் செல்லுகின்றாய்???