Wednesday, February 13, 2013

குட்டிக் கவிதைகள்







இதயத்தை புரியுமளவுக்கு நீ
இளகியவனுமல்ல‌
இறைஞ்சி நிற்குமளவுக்கு என்காதல்
இளக்காரமானதுல்ல‌




இறந்து பிறக்கும்
வர‌ம் கிடைத்தால் நீ
விரும்பும் ஒருத்தியாய்
மலர்ந்து வருவேன்




கூடவே வந்ததும்
நிழலென்று நினைத்துவிட்டேன்
நீங்கிச்சென்ற பின்புதான் புரிந்தது
அது நிலவென்று!!





காதல் பற்றிய அநுபவம்
உன்னில் ஏராளம் அதன்
ஆழம் பற்றிய புரிதலைதான்
நீயின்னும் எட்டவில்லை
காலத்திடம் நம்பிக்கையில்லை என்
காதலால் உணர்த்தமுடியாததை
காலம் உணர்த்திடுமென்ற துளி
நம்பிக்கையுமே இல்லை






No comments: