Saturday, February 9, 2013

இப்போதும்






தவிர்க்கமுடியாமல்
தவிக்கின்றேன்
தனிமைச்சூளையில்
சாம்பலாகின்றேன்...
நினைவுகளா அவை
உயிர்கொல்லும் கொடியவிஷம்!

ஏதேனும் ஒன்றிலென்னை
ஆழப்புதைத்துக்கொண்டாலும்
புதையலெடுத்துவிடுகின்றது இந்த‌
அபாயமான பாதாளம்

உலகத்துக்குள் மனதை
மறைக்க முயற்சித்தாலும்
பூமிக்குள் ஒளிந்திருக்கும்
எரிமலையாய்
போரிட்டு வெடித்துவிடுகின்றது
உனதான நினைவுகள்...

இப்போதும்
தவிர்க்கமுடியாமல் தவிக்கிறேன்
உனதான நினைவுகளிலிருந்து!!


No comments: