Saturday, February 16, 2013

ஆசை முகம்




எத்தனை மலர்களின் மணங்கள்
எனை கடந்துபோயிருந்தன‌
என்னை சுவாசிக்கச்செய்தது
உந்தன் நினைவுகள் மட்டுந்தான்

இன்றுவரை இதயத்தை
இயங்கச்செய்வதும் அந்த‌
இறவாத இளஞ்சுவாலைதான்

தென்றலாய் நம் நாட்கள்
குளிர்ச்சி தந்திருந்தாலும்
சூறாவளியாய் இதயங்களை
சுழற்றிவீசிய கொடுமைகள்
இன்னும் ரணமாகவே

ஆயிரமாயிரம் அர்த்தங்களை
அழகாக்கிக்காட்டினும் -கண்களுக்குள்
எனதாசை முகமாய்
நிறைந்திருப்பது நீமட்டுந்தான்

காலங்கொன்ற காதலாய் -அது
கண்ணீர் வடிப்பினும் 
காயாத ஈரமாகவே கவிபாடிடும் 
காலகாலமாய்

நீங்கிச்சென்ற நிலவாக‌
நீ தூரமே இருந்தாலும்
நீள் நித்திரையென் மரணத்திலும்
நிம்மதிதரும் பூமுகம் -நீ
நீமட்டுந்தான்!!


 (14.02.2013  வழங்கப்பட்ட தலைப்புக்கு லண்டன் தமிழ் வானொலியில் ஒலிபரப்பான கவிதை)



No comments: