Sunday, February 10, 2013

நேரடி ரிப்போட் (04.02.2013)

முதன்முதலாக வெளிநடப்பை அறிய, நேரடியாக சென்ற சந்தர்ப்பம்







இன்றைய காலைப்பொழுது சுறுசுறுப்பாய் விடிந்தது. மனதை அழுத்திய ஏராளமான அழுத்தங்கள் என்னை இயங்கவிடாமல் தடுத்திருந்த இக்கணங்களில் இந்த சுறுசுறுப்பு எனக்கு தேவையான ஒன்றாகவே நினைத்தேன்அதனால் மறுப்புக்கள் எதுவுமில்லாமல் இப்பயணத்தை ஏற்றுக்கொண்டேன்.




மாசி மாதம் 4ம் திகதி இலங்கையின் 65வது சுதந்திரதினத்தன்று காலை 10 மணியளவில் துருவம் இணையத்தின் உறுப்பினர்களான ஜனூஸ் அவர்களும் பிரோஸ் அவர்களும் என்னையும் சகோதரி சுமையாவையும் இணைத்துக்கொண்டு மட்டக்குளி பகுதிக்கு சென்றோம்.





நவமணி பத்திரிகைக்கு சேகரிக்கச்சென்ற செய்தி. கம்மல்வத்தை, அப்பல்வத்தை, ஸ்டேஷன் பகுதி மக்களை அவர்களின் குடியிருப்பிலிருந்து அரசாங்கத்தின் செயற்திட்டத்துக்காக வெளியேற்றிமை, அவர்களுக்கு பொறுத்தமான குடியிருப்புக்களையும் வசதிகளையும் செய்துகொடுக்காமை போன்ற பிரச்சனைகளை கண்டறியக்கிடைத்த வித்தியாசமான சமூக பொறுப்புணர்வை ஏற்படுத்திய பயணம்.






சேகரித்த செய்திகளோடு சில எதிர்ப்பான சம்பவத்தினையும் சந்திக்கநேர்ந்தது 
வந்த களைப்போடு ஒரு சிற்றுண்டிச்சாலையில்....





(நன்றி: நவமணி, துருவம்)

No comments: