Sunday, June 12, 2016

கவியருவி கவிதைப் போட்டியில் இரண்டாமிடம்


நம் கவியருவியில் 23-05-16 முதல் 30-05-16 வரை நடைபெற்ற “மின்னிதழ் வாரம்” கவிதைப் போட்டியில் இரண்டாமிடம் வென்ற இலங்கை த.எலிசபத்/ ராஜ்சுகா அவர்களின் கவிதையும், அவர்களைப் பாராட்டி நாங்கள் வழங்கும் சான்றிதழும் இதோ உங்களின் பார்வைக்கு:

விழுமுன் எழு
****************

உன்னை நீயே உணர்ந்து கொள்
உலகை வெல்ல வழியை கேள்
கண்ணை திறந்து வலிகள் வெல்
கலக்கம் தீர தெளிந்து நில்....

விழுத்தித் தள்ளும் விஷங்கள் அறி
விதியை துடைக்கும் விடயம் படி
அழுத்தி சொல்லும் ஆளுமையில் தெளி
விழுந்து விடாத எழுதல் படி.....

தோல்வி கணடு துடிப்பதை விடு
தோழர் தேர்வில் கவனம் எடு
பாழ்பட்ட நினைவை படிப்பது தடு
பாரில் உனக்கானப்
பாதையை நடு

த.ராஜ்சுகா
இலங்கை.




No comments: