Thursday, June 30, 2016

உனக்குள் தீயாய் எரியட்டும்

வாழப்பிறந்தவர்நாம் -தாரகையே
வாழ்வை அட மானம் வைப்பதேனோ
தாழ் விதென்றெண்ணி தரணியில் -உம்புகழ்
தளைக்க வழி தேடாயோ.....

உடம்பை மூலதனமாக்கிய உனக்குள் -உயிரான
நம்பிக்கை வாழ்வதனை மறந்தாயோ
உன்பிள்ளைக்காய் பெண்சமூகத்தை
உலகம் பழிக்க செய்வாயோ.....
மூச்சு நின்றுவிடு முன் வாழ்ந்துவிடு
பேச்சு அடங்குமுன் சாதித்துவிடு.....

கல் உடை
கடைகளுக்கு சமைத்துகொடு
பத்துப்பாத்திரம் தேய்
பலவீடுகளை சுத்தம்செய்...
வாழ்வதற்கு வழிகளுண்டு
கல்வி இல்லையென கலங்காதே
சல்லி இல்லையென சரியாதே
உனக்குள் தீயாய் எரியட்டும்
வாழ்தலின் வழிமுறைகள்....

No comments: