Thursday, June 23, 2016

நேர்காணல் அறிமுகம் கவிஞர் மன்னார் செந்தூரன் 20.06.2016




http://kalkudahnation.com/






வாராவாரம் வெள்ளிக்கிழமையில் கல்குடாநேசன் இணையத்தளம் “கல்குடா நேசனின்  இலக்கிய  நேர்காணல்”  என்ற  பகுதியினூடாக எழுத்தாளர்கள், கலைஞர்கள், படைப்பாளர்களைச் சந்தித்து வருகின்றது. வெற்றிகரமாக பலரது  ஆதரவையும் பெற்று வளர்ந்து வரும் இப்பகுதியினூடாக கலைஞர்களின் படைப்புக்கள் திறமைகள் இலட்சியங்கள் ஆகியவை பற்றி நேர்காணலூடாகப் பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சியளிக்கின்றது. 

இதன்  தொடரில், 39வது  படைப்பாளியாக‌  இவ்வாரம்  எம்மோடு  இணைய இருப்பவர்  பேராதனைப் பல்கலைக்கழக  விஞ்ஞானபீட  இரண்டாம்  வருட  மாணவன், கவிஞர் மன்னார்  செந்தூரன்  அவர்கள். இன்றைய   இளம்  படைப்பாளிகளிடமிருந்து  தனித்துவமான  இடத்தினைத் தக்க வைத்துக்கொள்ள முயற்சிக்கும் துடிப்புள்ள இவ்விளைஞர் தனது கவிதைகளில் சந்தத்திற்கு அதிக  முக்கியத்துவம் கொடுத்து, மரபின் பால் தன்  கவனத்தை திருப்பியுள்ளார்.

 “கவிதையின் பரிணாம வளர்ச்சி எந்தளவிற்கு வியாபித்தாலும் மரபுக்கவிதையின் சொற்சுவைக்கும் பொருட்சுவைக்கும்  எக்கவிதை முறையும் இணையாக முடியாது. அமைப்பு முறை காரணமாக உடனடியாக விளங்கிக்கொள்ள முடியாத நிலையிருக்கலாம். இந்நிலை கூட மரபுக்கவிதைகளின் தரத்திற்கும் தனித்துவத்திற்கும் காரணம் எனலாம்” என  மிகவும் ஆழ்ந்த கருத்துக்களை எம்மோடு பகிர்ந்து கொண்டார். 

பொறுப்பும் கடமையுணர்வும்  நிறைந்த  கவிஞர்  செந்தூரன்  அவர்கள்  தனது காத்திரமான பேச்சின்  மூலம் ஏனைய  இளைஞர்களிலிருந்து  வேறுபட்டு  நிற்கின்றார். காலம் தந்த  காயங்களோடும், அவை கற்பித்த  அநுபவங்களையும் கொண்டு  நல்ல  அத்திவாரமிட்டுக்கொண்ட  கவிஞர்  எல்லா இளையவர்களுக்கும் முன்னுதாரணமாக விளங்குகின்றார். கவியரங்கங்களில்  கலக்கிக்கொண்டிருக்கும்  கவிஞரை  கல்குடாநேசனுக்காக அணுகினோம். அவர் பகிர்ந்து கொண்ட  அழகான விடயங்களுக்காக அடுத்த வெள்ளி வரை காத்திருப்போமா…… 


நேர்காணல்-கவிதாயினி ராஜ்சுகா

No comments: