Monday, November 30, 2015

நீயென் வாழ்க்கையா...

நில வா
நினைவா
நிழலா  -நீயென்
நிஜமா...

அன்பா
அருகாமையா  -நீயென்
அரவணைப்பா...

காதலா
காவியமா  -நீயென்
கானலா...

இன்பமா
இளமையா  -நீயென்
இதயமா...

வாலிபமா
வானவில்லா  -நீயென்
வாழ்க்கையா...

தூரமா
தூபமா  -நீயென்
தூண்டிலா...

நட்பா
நன்மையா  -நீயென்
நம்பிக்கையா...

வினாவா
விடையா  -நீயென்றும்
விடுகதையா...



1 comment:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்

அற்புதவரிகள் இரசித்தேன் வாழ்த்துக்கள்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-