Thursday, November 19, 2015

மேகம் அமைத்த கோபம்




மேகம் கூடிக்கதைத்தது
மேலே திட்டம் அமைத்தது
வேகம் எடுத்து நிறைத்தது
வேண்டாமென்றும் திணித்தது...

வழிகளை நதிகளாய் வனைந்தது
வரப்புக்களை குத்தகைக்கு எடுத்தது
வலிகளை சுலபமாய் பொழிந்தது
வரலாற்றில் கண்ணீரை பதிந்தது...

இருந்த இடத்தை அழித்தது
இல்லா வாழ்வை தந்தது
வருந்தி அழுதிட வைத்தது
வையத்தில் அதிர்வை இறைத்தது..

ஏதிலிக்கூட்டத்தை படைத்தது
ஏந்திநிற்கும்படி விதித்தது
பாதிநிலை வாழ்வை பழக்கியது
பாரிலெம் மக்காளை வதைத்தது

சூரியனை கடத்திச் சென்றது
சூழ்நிலை கைதியாக சொன்னது
பாரிற்கு வரத்தடை என்றது
பார்த்தாலே குற்றமென்றுரைத்தது...!!

No comments: