Monday, November 23, 2015

எம்மை பிரித்துவைத்த இறையில்.....





இதுவரை கண்டதில்லை
உன்னைப்போல ஓர் அதிசயத்தை
இழந்திடவும் விரும்பவில்லை
இடர்கள் எத்தனை வந்தபோதும்...

எனக்காகவே உருவெடுத்தவளாய் -நீ

விறுப்பு வெறுப்புக்களில்
வித்தியாசங்களில்லை
எண்ணங்கள் எழுத்துக்களில்
எள்ளளவும் வேற்றுமையில்லை...

ஒரே பாதையில்
ஒரே பார்வையில் நமக்கானது
ஒரே பயணமாய்...

புன்னைகை கூட‌
புரிதலாய் ஒத்துப்போகின்றது -இதை
புதுமையென்னாமல் என்னவென்பேன்...

இறைச்சட்டம் எத்தனை
சிக்கலானது என்பதனை
நமது உறவே உறுதிப்படுத்திக்கொண்டிருக்கின்றது...


உன்னை நானோ
என்னை நீயோ சந்திக்காவிடில்
கடவுள் அமைத்த விதி
சரியென்றேதான் ஒப்பித்திருப்பேன்...


எனது திருமணமோ
உனது திருமணமோ
வேறுவேறாய் நிச்சயிக்கப்படாதிருந்தால்
என்னாலும் சொல்லமுடிந்திருக்கும்
எனது விதியிலும் அதிஸ்டமுள்ளதென்று...

எல்லாவற்றையும் ஒன்றாக்கிவிட்டு
எம்மை பிரித்துவைத்த இறையில்
எள்ளளவும் கோபமில்லையென -என்னால்
எளிதில் சொல்ல முடியவில்லை...!!

No comments: