Friday, November 27, 2015

27.11.2015 அன்று ஊடறு இணையத்தில் வெளியான கவிதை

http://www.oodaru.com/?p=9341



இறைச்சட்டம் எத்தனை
சிக்கலானது என்பதனை
நமது உறவே உறுதிப்படுத்திக்கொண்டிருக்கின்றது…


உன்னை நானோ
என்னை நீயோ சந்திக்காவிடில்
கடவுள் அமைத்த விதி
சரியென்றேதான் ஒப்பித்திருப்பேன்…


எனது திருமணமோ
உனது திருமணமோ
வேறுவேறாய் நிச்சயிக்கப்படாதிருந்தால்
என்னாலும் சொல்லமுடிந்திருக்கும்
எனது விதியிலும் அதிஸ்டமுள்ளதென்று…


எல்லாவற்றையும் ஒன்றாக்கிவிட்டு
எம்மை பிரித்துவைத்த இறையில்
எள்ளளவும் கோபமில்லையென -என்னால்
எளிதில் சொல்ல முடியவில்லை…!!

1 comment:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
அற்புதமான வார்த்தைகள்... இணையத்தில் வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-